வரத்து குறைவால் தூத்துக்குடியில் அரிசி விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
Sep 22 2022 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் அரிசி விலை திடீரென்று குவிண்டாலுக்கு 300 ரூபாய் முதல் 400 வரையிலும் கிலோவிற்கு 4 முதல் 5 ரூபாய் வரை விலை உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி அரிசி சந்தைக்கு உள்ளூர் மற்றும்டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அரிசி இறக்குமதி குறைந்துள்ளது. மேலும் தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் தூத்துக்குடி அரிசி சந்தையில் திடீரென்று அரிசியின் விலை உயர்ந்துள்ளது. தரம் வாரியாக குவிண்டாலுக்கு ரூபாய் 300 முதல் 400 வரையிலும் கிலோவிற்கு 4 முதல் 5 ரூபாய் வரையிலும் அரிசி விலைகள் உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, ஜி எஸ் டி வரி டீசல் விலை உயர்வால் வாடகை கட்டணம் உயர்வு போன்றவைகளால் அரிசி விலை உயர்ந்துள்ளதாகவும், இன்னும் நான்கு மாதங்களுக்கு அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர். பொதுமக்களின்அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசியின் இந்த திடீர் விலை ஏற்றம் ஏழை எளிய மக்களை கவலையடைய செய்துள்ளது.