திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தில் தமிழக மாணவ மாணவியர்கள் புறக்கணிப்பதாக மாணவர்கள் வேதனை
Sep 22 2022 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தில் மத்திய நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு இடமளிக்காமல் புறக்கணிப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் மத்தியப் பல்கலைக்கழத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் வெற்றிபெற்ற தமிழக மாணவர்களை அவர்களின் விருப்பப்பாடப் பிரிவுகளில் சேர்க்காமல் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக நிர்வாகம் புறக்கணித்துள்ளது. மாணவர்கள் விருப்ப பாடப்பிரிவுக்கான பிற தேர்வுகளை எழுதவில்லை என காரணங்களை கூறி அவர்களை சேர்க்கைக்கு அனுமதிக்காமல் வெளியேற்றினர். நுழைவு தேர்வில் வெற்றிபெற்ற 200-க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இந்தவகையில் புறக்கணிக்கப்பட்டனர்.
போலியான காரணங்களை கூறி அட்மிஷன் செய்யாமல் வெளியேற்றியது வண்மையாக கண்டிக்கத்தக்கது என மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.