இருளர் இனத்தை சேர்ந்த முதல் வழக்கறிஞருக்கு, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து..... தனது வெற்றிப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் காளியம்மாளுக்கு, இதயம் கனிந்த பாராட்டு
Sep 23 2022 8:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இருளர் இனத்தை சேர்ந்த முதல் வழக்கறிஞர் காளியம்மாளுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக-கேரள எல்லைப் பகுதியான கோபனாரியைச் சேர்ந்த இருளர் இன மக்களின் முதல் வழக்கறிஞராக தனது வெற்றிப் பயணத்தில் காலடி எடுத்து வைக்கும் காளியம்மாளுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். திரு.மருதன்-திருமதி.ஆண்டிச்சி தம்பதியினரின் ஒரே மகளான காளியம்மாள், தான் சந்தித்த சோதனைகளையெல்லாம் முறியடித்து சாதித்துள்ளார் என்றும், காளியம்மாள் ஒரு சிறந்த வழக்கறிஞராக அனைத்திலும் வெற்றிகளைப் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.