சானிடைசர் என்கிற பெயரில் கேன்களில் எரிசாராயத்தை அடைத்து விற்பனை - திருப்பூரில் 7 பேரை கைது செய்தது தனி போலீஸ் படை
Sep 23 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் சானிடைசர் என்கிற பெயரில் எரிசாராயத்தை கேன்களில் அடைத்து விற்பனை செய்த 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊத்துக்குளியை அடுத்த முண்டூர் கிராமத்தில்
எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், எரி சாராயத்தை கடத்தி வந்து சானிடைசர் என்கிற பெயரில் சிறிய கேன்களில் அடைத்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த விஜய், சதீஷ், ஜெயராஜ், சுலைமான், மனோஜ், திருப்பூரை சேர்ந்த குணசேகரன் தர்மபுரியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயிரத்து 750 லிட்டர் எரி சாராயம், வேன், இரண்டு கார்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.