புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா தொடங்கியது - விற்பனைக்காக குவிந்துள்ள தசரா வேட பொருட்கள்
Sep 26 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் ஆலய தசரா விழா, மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். உலக புகழ் பெற்ற மைசூர் சமுண்டீஸ்வரி ஆலயத்திற்கு அடுத்த படியாக குலசேகரன்பட்டின தசரா விழா கருதப்பபடுகிறது.
கொரரோனா பரவல் காரணமாக இந்த ஆலயத்தில் தசராவிழா எளிமையாக நடைபெற்று வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை ஐந்து மணிக்குகோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் கொடிப்பட்டம். கோவிலை சுற்றி. மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அம்மனை வேண்டி 9 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, காப்பு கட்டி, மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.