வால்பாறை அருகே அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை மூட தொழிலாளர்கள் எதிர்ப்பு
Sep 26 2022 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை மூட தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை மூட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கடந்த 2 நாட்களாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் வகையில் கருத்து கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேயிலை தோட்டத்தை மூடினால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.