மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் டிவிட்டர் பதிவில் சரமாரியான கேள்வி

Oct 6 2022 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

இ.பி.எஸ்.-சுக்‍கு எதிராக 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்திருப்பது குறித்து, கேள்வி எழுப்பியுள்ள மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு விசாரணை நடத்தி, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடி ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும் எனக்‍கூறியிருந்த ஜே.சி.டி. பிரபாகரன், அவ்வாறு தொடர்ந்து விமர்சித்தால் 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை வெளியிடுவேன் எனவும் அவர் எச்சரித்திருந்தார். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன் டிவிட்டர் பதிவில் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளார். 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளதை அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது என்றும், அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா...? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்தத் தொகைக்‍கு வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று கேட்டுள்ள திரு.பாலகிருஷ்ணன், அரசு தலையிட்டு விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00