சென்னை நெற்குன்றத்தில் பால் கடையில் இருந்து 72 லிட்டர் பால் திருட்டு : சி.சி.டி.வி. காட்சிகள் வைரல் - போலீசார் விசாரணை
Oct 6 2022 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை நெற்குன்றம் பகுதியில், பால் கடையில் இருந்து 72 லிட்டர் பால் திருடப்பட்டன. இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் பால் முகவராக உள்ளார். இவர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தின் முன்பாக, இன்று அதிகாலை, பால் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. 72 லிட்டர் பாலை, பிளாஸ்டிக் டப்புகளோடு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பால் திருடுவது குறித்த சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.