தேனி போடியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றும் முயற்சி - கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு
Nov 24 2022 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடியில் காளையிடமிருந்து கன்றை காப்பாற்றும் முயற்சியில் 6 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் விழுந்த தாய்ப்பசுவை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர். போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 6அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாய் அருகே கன்றுடன் பசுமாடு நின்று கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கே வந்த காளை மாடு கன்றைத் தாக்க முயற்சித்தது. கன்றை காளை மாட்டிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் நிலை தடுமாறிய பசுமாடு அருகில் உள்ள 6 அடி ஆழமுள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்து தத்தளித்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டு கன்றுடன் இணைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.