திருவாரூர்: வலங்கமான் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு - வீணாக வெளியேறும் தண்ணீர்
Nov 24 2022 5:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் வலங்கமான் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி கழிவுநீருடன் கலப்பதால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். தஞ்சை மாவட்டம், திருகருக்காவூர் பகுதியில் உள்ள நீரேற்றும் மையத்தில் இருந்து குழாய் மூலம் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதில், 10 லட்சம் லிட்டருக்கு மேல் குடிதண்ணீர் வீணாகி கழிவுநீர் கால்வாயில் கலந்துசெல்கிறது. இதனால், பல கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீர் கிடைக்காமல் காலிக் குடங்களுடன் அலைந்து திரிந்து அவதியுற்று வருகின்றனர். இதுதொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.