காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்தி வைப்பு - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு
Nov 25 2022 7:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, ரூபி மனோகரன் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி கூறியிருந்தார். இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ரூபி மனோகரனை தமிழக காங்கிரசின் விசாரணைக் குழு தலைவர் ராமசாமி சஸ்பெண்ட் செய்ததை அறிந்ததாகவும், இயற்கை நீதி கோட்பாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.