திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனத்தில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடு அம்பலப்படுத்திய இளைஞர் - விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்டதற்கு வழக்கா? என வேதனை
Nov 25 2022 8:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனம் கிராமத்தில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் பைப்லைன் அமைக்காமல் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்ட முரளிகிருஷ்ணன் என்ற இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளை விசாரிக்காமல், விழிப்புணர்வுக்காக வீடியோ வெளியிட்ட தன் மீது வழக்கா என முரளிகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் பேசிப் பதிவிட்டுள்ள அவர், வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.