பெண் எஸ்பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : ஓய்வு பெற்ற டிஜிபி ஜே.கே.திரிபாதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்
Nov 26 2022 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண் எஸ்.பிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2021ம் ஆண்டு தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவர் மீதும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிபாதியின் சாட்சியத்தை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்து கொண்டார். மேலும் விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.