சென்னை திருமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
Nov 26 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம் வழியாக மஹிந்திரா சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை ஓட்டி வந்த நபர் பதட்டத்தில் திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக எரிந்தது. அண்ணா நகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.