விழிப்புணர்வு தினத்தையொட்டி ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலித்த சென்னை ரிப்படன் கட்டடம் - பார்வையாளர்கள் பரவசம்

Nov 26 2022 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள ரிப்பன் கட்டடம் ஆரஞ்சு வண்ணத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25 முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை 16 நாட்களுக்கு சர்வதேச பாலின வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டடம் நேற்று ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது. ஆரஞ்சு வண்ண மின்விளக்குகளில் ஒளிர்ந்த ரிப்பன் கட்டடம் காண்போரின் கண்களை கொள்ளை கொள்வதாக இருந்தது. இதேபோல் சென்னையில் அமைந்துள்ள நேப்பியர் பாலமும் ஆரஞ்சு வண்ணத்திலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதேபோல் வரும் 2ம் தேதியும் 10 ஆம் தேதியும் ஆரஞ்சு நிற அலங்காரம் அரங்கேறும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஐ.நா.சபை ஆரஞ்சு நிறத்தை தேர்ந்தெடுத்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00