நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்துள்ள பனிமூட்டம், சாரல் மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Nov 26 2022 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் நிலவும் கடும் பனி மூட்டம், சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. கடுங்குளிர் நிலவுவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. அடர்ந்த பனி மூட்டத்தால், சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.