சென்னை எம்.ஆர்.சி. நகர் அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு பலத்த பாதுகாப்பு - பெரியார் சிலைகளுக்கும் போலீசார் பாதுகாப்பு
Dec 7 2022 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று பல்வேறு இந்து அமைப்புகள் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்பொழுது சில அமைப்புகள் அம்பேத்கரை காவிய தலைவனே என சித்தரித்து போஸ்டர் ஒட்டியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று எம்.ஆர்.சி நகரில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெரியார் சிலைகளுக்கும், சில அமைப்புகள் காவி துண்டு அணிய போவதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை அடுத்து சென்னையில் அமைந்துள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.