கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகறாரில் அண்ணன் மீது மண்ணென்னெய் ஊற்றி தீ வைத்த தம்பி

Dec 7 2022 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகறாரில் அண்ணன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொடூர தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். மணலூர்பேட்டை அருகே விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முத்த மகன் இளங்கோவன் ஒரு காலை இழந்து வீட்டில் இருக்கிறார். இதனிடையே இளையமகன் நந்தகோபால் தாய் வசிக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி கேட்டுள்ளார். ஆனால் ஆதரவின்றி தவிக்கும் இளங்கோவனுக்குத்தான் வீடு என ஆதிலட்சுமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்த கோபால் அண்ணனுக்கு மது கொடுத்து அவர் மயக்க நிலையில் இருக்கும் போது மண்ணெணெய் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடினார். 60 சதம் தீக்காயத்துடன் இளங்கோவன் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி நந்தகோபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00