'துணிவு' பட பாணியில் திண்டுக்கல்லில் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது - ஊழியர்களை கட்டிப்போட்டு, வங்கி மேலாளரை தாக்கிய கொள்ளையன் சிக்கினான்
Jan 24 2023 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் வங்கிக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கலீல் ரகுமான் என்ற இளைஞர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று, 2 பெண்கள், ஒரு ஆண் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப்போட்டு விட்டு, வங்கி மேலாளரை தாக்கியுள்ளார். இதனிடையே, வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து கூச்சலிட, பொதுமக்கள் உதவியுடன் குற்றவாளியைப் பிடித்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் கலீல் ரகுமானை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'துணிவு' பட பாணியில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக அந்த நபர் தெரிவித்தார்.