திண்டுக்கல்: உலகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - 582 காளைகள் 348 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Jan 24 2023 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்துள்ளது உலகம்பட்டி கிராமத்தில், கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 582 காளைகள் 348 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சைக்கிள், சில்வர் பாத்திரம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. அதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் வெளியூரில் இருந்து வருகை தந்தனர். இதில் 27 பேர் காயம் அடைந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.