ஈஷா யோகா மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ மர்ம மரண விவகாரம் : தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்
Jan 24 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மர்ம மரணம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்திய அவர், சென்னை திநகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈஷா யோகா மையத்திற்கு சென்ற சுபஸ்ரீ மர்மமாக உயிரிழந்தது குறித்து பதிலளித்த சரத்குமார், இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.