கிருஷ்ணகிரி: 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளர்களை கொண்டு கிராம சபை கூட்டம் - ஊழல்களை பட்டியலிட்ட இளைஞர்
Jan 31 2023 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பல்லப்பள்ளி ஊராட்சி உப்பராயணப்பள்ளியில் குடியரசு தினத்தன்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இல்லாமல் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை வைத்து கிராம சபை கூட்டம் நடத்தியதாக பரபரப்பு புகார் எழுப்பப்பட்டுள்ளது. பல்லப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து தேசியக் கொடியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஊழல்களை வெங்கடேஷ் என்ற கிராமவாசி பட்டியலிட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.