பொதுமக்கள் பாதுகாப்பின்றி உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதை நிரூபிக்கும் வகையில் தி.மு.க. அமைச்சர் - நாடாளுமன்ற உறுப்பினர் சண்டை போட்டுக்கொண்டிருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது - தி.மு.க.வினரின் அராஜக செயல்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்
Mar 18 2023 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொதுமக்கள் பாதுகாப்பின்றி உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதை நிரூபிக்கும் வகையில் தி.மு.க. அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்டை போட்டுக்கொண்டிருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை தற்போது ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தந்த அதே பொற்கால ஆட்சியை அமைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீராக்கி மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.