கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி பெட்டகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு : நான்கரை கிலோ தங்க ஆபரணங்கள், 24 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தகவல்
Mar 18 2023 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி பெட்டகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான ஆவணங்கள், தங்க நகைகள், மற்றும் வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்த சகோதரர்கள் எம்.ஆர் கணேஷ் மற்றும் எம்.ஆர் சுவாமிநாதன் ஆகியோரின் வங்கி பெட்டகத்தை தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டனர். இதில் ஏராளமான ஆவணங்களும் நான்கரை கிலோ தங்க ஆபரணங்களும், 24 கிலோ வெள்ளிப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை புகார் கொடுக்காதவர்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.