ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவனை மண்டியிட வைத்து பிஸ்கட் உண்ண வைத்த ஆசிரியர் : காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் - கல்விதுறை அதிகாரிகள் விசாரணை
Mar 18 2023 10:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவனை ஆசிரியர் மண்டியிட வைத்து பிஸ்கட்டை தூக்கி போட்டு சாப்பிட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த போடியநாயக்கன் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக மணிகண்டன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு பிஸ்கட்டை தரையில் போட்டு மண்டியிட சொல்லி நாயைபோல் உண்ண வைத்துள்ளார். மேலும் தரையில் கிடந்த குப்பைகளை எடுத்து மாணவன் பாக்கெட்டில் வைத்து இதுதான் இனிமேல் உங்களுடைய குப்பை தொட்டி எனகூறி கிண்டலடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.