தருமபுரியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த காட்சிகள் வெளியீடு - ஏரிக்கரையில் யானை ஏற முயன்றபோது துதிக்கை தாழ்வு அழுத்த மின்கம்பியில் பட்டதால் துடிதுடித்து உயிரிழப்பு

Mar 18 2023 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரியில் ஏரிக்கரையின் மீது ஏற முயன்றபோது மின்சார கம்பி உரசியதில் யானை பரிதாபமாக உயிரிழந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று இரவோடு இரவாக கிருஷ்ணாபுரம் ஏரிக்கு தஞ்சம் புகுந்தது. இந்நிலையில், யானை அப்பகுதியில் உள்ள சாலையில் உலா வந்ததையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து, காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, யானை கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி பகுதி ஏரிக்கரை பகுதிக்கு சென்றது. அங்குள்ள மண்திட்டு பகுதியில் யானை ஏற முயன்றபோது, உயர்மின்கம்பி யானையின் தலையில் உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் யானை சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதன் வீடியோ காட்சி வெளியாகி காண்போரை கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மண்டல பாதுகாப்பு அலுவலர், வன பாதுகாப்பு அலுவலர், கால்நடை மருத்துவர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்வதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00