ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவளர்ச்சிக்குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு : குற்றவாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டை விதித்தது போக்சோ நீதிமன்றம்
Mar 18 2023 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவளர்ச்சிக்குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு இருளப்பன் என்பவர் மன வளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இருளப்பன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 20 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.