கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை... யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம்
Mar 19 2023 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் புதன்கிழமை யுகாதி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடு, கோழி முதல் தங்கம் வரை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு 12 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட கர்நாடகா, ஆந்திர மாநில வியாபாரிகளும் வந்திருந்தனர். இந்த வார சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.