பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து - நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறை
Mar 19 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. நாரணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாராமனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணி முடிந்து சென்ற நிலையில் திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.