நள்ளிரவில் பள்ளம் தோண்டி மர்ம பூஜை நடத்தியதால் பரபரப்பு - நரபலி கொடுத்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சம்
Mar 21 2023 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நள்ளிரவில் பள்ளம் தோண்டி சிலர் மர்ம பூஜையில் ஈடுபட்டதால் நரபலி கொடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் 6 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மூர்த்தியிடம் கேட்டபோது அந்த இடத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சாமி சிலைகள் இருப்பதாகவும், அவை தோண்ட தோண்ட பூமிக்கு உள்வாங்கி செல்வதாக கூறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.