விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு
Mar 21 2023 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த யானையை பிடிக்க கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. பணியில் தொய்வு ஏற்பட்டதால் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், சுஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்பு கருப்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து கும்கிகள் மூலம் பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.