கோவை மேட்டுப்பாளையத்தில் பெண் யானையின் வாயில் வெடி விபத்தால் காயம் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
Mar 21 2023 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மேட்டுப்பாளையத்தில் பிடிபட்டு உயிரிழந்த பெண் யானையின் வாயில், வெடி விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆதிமாதையனூர் கிராமத்தில் வாயில் அடிபட்ட நிலையில் சுற்றித்திரிந்த பெண் யானை மீட்கப்பட்டு, வரகளியார் பகுதியில் கரோலில் கால்நடை மருத்துவர்கள் குழு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக பெண் யானை உயிரிழந்தது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் குழு யானையின் உடலை கூறாய்வு செய்ததில் வெடி விபத்தில் யானையின் வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. யானைக்கு வெடிவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.