பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : மே 6ஆம் தேதி வேலைநாள்
Mar 24 2023 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 6ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.