தென்காசியில் திமுக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டிய நபர் கைது
Mar 24 2023 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டத்தில் திமுக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ஆபாசமாக பேசி மிரட்டில் விடுக்கும் வீடியோ வைரலானது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் குத்துக்கல்வலசையை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.