2022 ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகம் முழுவதும் 18.50 லட்சம் பேர் எழுதியிருந்தனர்
Mar 24 2023 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 10 ஆயிரத்து 117 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என தேர்வு எழுதியவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தேர்வு முடிந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்பி இன்று வெளியிட்டுள்ளது.