வரும் 29-ம் தேதி 'பொன்னியின் செல்வன்-2' இசை வெளியீட்டு விழா
Mar 26 2023 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேரு உள்விளையாட்டு அரங்கில் 'பொன்னியின் செல்வன்-2' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தனர். இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆன இப்படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. 2-ம் பாகத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.