காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத திமுக அரசைக் கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Mar 27 2023 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி - வைகை கிருதுமால் - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத திமுக அரசைக் கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
திருச்சி, புதுக்கோட்டை, பகரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதாக தெரிவித்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியில் காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு - இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால் திமுக ஆட்சியில் நிதி ஒதுக்காததால் திட்டப் பணிகள் பாதியில் நிற்பதாக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் குற்றம்சாட்டினர்.