செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த விவகாரம் : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் விசாரணை
May 25 2023 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஞ்சலி என்பவரிடம், மாவட்ட ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டார்.