கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் பாஜகவினர் எருமை மாட்டினை கட்டி ஆர்ப்பாட்டம்
May 26 2023 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி அருகே வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் பாஜகவினர் எருமை மாட்டினை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணலூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், சின்னப்பொன்னு, தனபால் உள்ளிட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் செல்வி, அவரது கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் விசிகவை சேர்ந்த அரசு ஆகியோர் அவர்களை பாஜகவிலிருந்து விலகி வரவேண்டும் என வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களது வீடு மற்றும் கால்நடை கொட்டகை ஆகியவை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி அரசு அதிகாரிகளின் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.