சென்னை காசிமேட்டில் தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல், மகனும் தீக்குளித்து தற்கொலை
May 26 2023 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை காசிமேட்டில் தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல், மகனும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்த நாகேஸ்வரி என்பவருக்கு, 2 மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நாகேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். தாயின் இழப்பை தாங்க முடியாமல் இளைய மகன் விவேக்கும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.