கள்ளக்குறிச்சியில் மணமக்களுக்கு மண மேடையிலேயே மதுபாட்டில்களை பரிசளித்த நண்பர்கள் : வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
May 26 2023 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சியில் மணமக்களுக்கு மதுபாட்டில் பரிசளித்த நண்பர்கள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், விருகாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில், மணமகனின் நண்பர்கள் பணம், நகை, பரிசு பொருட்களை வழங்காமல், விலை உயர்ந்த மது பாட்டிலை வழங்கினர். இதனை மணமகள் குத்துவிளக்கு ஏந்துவது போல் மதுபாட்டிலை வாங்கி மணமகனுடன் ரசித்து சிரித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.