ராணிப்பேட்டையில் சர்வர் பிரச்னையால் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
May 26 2023 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராணிப்பேட்டையில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் சர்வர் பிரச்னையால் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 மற்றும் +1 வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ராணிப்பேட்டையில் கடந்த 24ம் தேதி முதல் சர்வர் பிரச்சனையால் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை பிரச்சினையை தீர்ப்பதுடன் கால அவகாசம் அளிக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.