கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கப்பட்ட 60-வது மலர் கண்காட்சி : ஒரு லட்சம் மலர்களால் அமைக்கப்பட்ட ஒட்டகச்சிவங்கி, வாத்து உருவங்கள்
May 26 2023 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் 60ஆவது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு 60வது மலர் கண்காட்சி விழா கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று தினங்கள், இந்த மலர் கண்காட்சி விழா நடைபெறும். ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு ஒட்டகச்சிவிங்கி, முயல், வாத்து உருவங்கள் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளால் ஆன காட்டு மாடு உருவம் அனைவரையும் கவர்ந்தது. இவற்றைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.