சென்னை கோயம்பேடு சந்தைக்கு பழங்களின் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் வருகை குறைவால் பழங்களின் விற்பனை மந்தம்
May 26 2023 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கோயம்பேடு சந்தைக்கு பழங்களின் வரத்து அதிகரித்தாலும் பொதுமக்களின் வருகை குறைவால் மாம்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை மந்தமாக காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு சந்தைக்கு சேலம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழம், பலா உள்ளிட்ட பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்கோவா 100 முதல் 120 ரூபாய்க்கும், பங்கனபள்ளி 60 முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பலாப்பழம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.