அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பேட்டி
May 26 2023 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறினார். சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நாராயணன் திருப்பதி, இதனை தமிழக காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும் குற்றம்சாட்டினார். இதனிடையே, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சீதா, வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது நியாயமானதல்ல என கூறினார்.