காஞ்சிபுரம் அருகே பாலாற்று குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக வெளியேறும் குடிநீர்
May 26 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் பாலாற்று குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வெளியேறி வீணாகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக வாலாஜாபாத்திலிருந்து வரும் பாலாறு குடிநீர் குழாய் முறையாக பராமரிக்கப்படாததால், செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம், படப்பை, கரசங்கால் ஆகிய பகுதிகளில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் பல லட்சம் லிட்டர் பாலாற்று நீர் நெடுஞ்சாலையில் ஆறாய் ஓடி வீணாகிறது. கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், பாலாற்று குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.