கள்ளக்குறிச்சியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் புகுந்து செல்ஃபோனை திருடிச் சென்ற மர்மநபர்கள் : சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிவரும் போலீசார்
May 26 2023 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் மாஸ்க் அணிந்த ஒருவர், செல்ஃபோனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காந்திரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சுபாஷினி என்பவர் கலர் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடையில் சுபாஷினி மட்டும் தனியாக இருப்பதை இருவர் நோட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் கடைக்குச் சென்று ஜெராக்ஸ் எடுப்பதுபோல் நடித்து, சுபாஷினியின் செல்ஃபோனை திருடிச் சென்றார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.