பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
May 26 2023 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தையே கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் திமுகவினர் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அகவிலைப்படி நிலுவை தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மண்டல அளவிலான நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.