குன்னூரில் கடந்த 20 ஆண்டுகளாக சாலையை சீரமைக்க போராடும் மக்கள் : அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை வேதனை
May 29 2023 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டம், குன்னூரில் 20 ஆண்டுகளாக சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குன்னூர் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வேண்டி போராடி வருகின்றனர். நோயாளிகளை ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்குக்கூட வசதி இல்லாததால், சாலையை விரைவில் சீரமைத்து தரக்கோரி வண்டிச்சோலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.