மதுரை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கனமழையால் சேதம் : ஏக்கருக்கு ரூ.30,000 நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை
May 29 2023 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன. உசிலம்பட்டி புறநகர் பகுதிகளிலான ஆரியபட்டி, உச்சப்பட்டி, குப்பனம்பட்டி, கண்ணியம்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. ஆரியபட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் நாசமாகின. இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள விவசாயிகள், சேதங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.